நான் பேசவே இல்லை.. யாரோ மிமிக்ரி பண்ணிட்டாங்க.. அதிமுக மாஜி எம்எல்ஏ மீது பாய்ந்தது கேஸ்!
சென்னை: "நான் பணம் கொடுத்தேனா... அந்த வீடியோவில் என் பேச்சை யாரோ மிமிக்ரி செய்துவிட்டார்கள்" என்று சொல்லி சமாளித்த முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதற்கு முன்பு ஏகப்பட்ட விவகாரங்கள் வேலூர் தொகுதியில் இருந்து நாள்தோறும் வெளிவந்து வெடித்து கொண்டே இருந்தது. அதில் ஒன்றுதான் பணப்பட்டுவாடா செய்த சம்பவமும் அது தொடர்பான வீடியோவும்!
வாணியம்பாடியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார்தான் பணம் பட்டுவாடா குறித்து பேசுகிறார். கையில் ஒரு லிஸ்ட்டை வைத்து கொண்டு ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு சில தொண்டர்களிடம் பேசுகிறார்..

ஏசிஎஸ் ஆட்கள்
அதில், "ஓட்டுக்கு 500 ரூபாய்.. ஏசி சண்முகத்துக்கு வாக்களிக்கணும்.. அதனால மக்களுக்கு பணம் ஒழுங்கா போய் சேரணும்.. பணம் குடுக்கறதை போலீஸ்காரங்க யாரும பார்த்துடக்கூடாது.. அப்படி போலீஸ் வருதான்னு பார்க்க 2, 3 பேர் நின்னு கவனிக்கணும்.. ஏசிஎஸ் ஆளுங்க இல்லாதவங்களுக்கு காசு தரக்கூடாது" என்று சொல்லி கொண்டே போகிறார்.

பெரும் சர்ச்சை
இப்படி பணம் எப்படி சப்ளை செய்யணும் என்று கோவி.சம்பத்குமார் விலாவரியாக சொன்ன விஷயம், வீடியோவாக தமிழகம் முழுவதும் பரவியது. தேர்தல் வேலூரில் ரத்து செய்யப்பட்டாலும் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது.
மிமிக்ரி
இதை பற்றி சொன்ன கோவி சம்பத்குமார், "அந்த வீடியோவில் என் பேச்சை யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள். பணம் சப்ளை பண்ணி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என கெத்தாக கூறியிருந்தார்.

போலீசில் புகார்
இருந்தாலும், சட்டம் தன் கடமையை செவ்வனே செய்துள்ளது. அதன்படி வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன், வாணியம்பாடி தாலுகா போலீசில் கோவி சம்பத்குமார் மீது புகார் கொடுத்தார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் குறித்து பேசியதாக தன் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications