சாதி பெயர்கள் எதுக்கு? TNPSC குருப் 1 கேள்விகளால் வெடித்த சர்ச்சை.. நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: இன்று தமிழ்நாடு முழுக்க திட்டமிட்டபடி க்ரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டது. மாநிலம் முழுக்க சுமார் 2.49 லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதினர். இதற்கிடையே க்ரூப் 1 தேர்வுகளில் இரு கேள்விகளுக்கு விடைகளில் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் சிலர் இதைக் குறிப்பிட்டு இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர் உட்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.. இதற்காக மாநிலம் முழுக்க மாநிலம் முழுக்க 2.49 லட்சம் தேர்வாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

க்ரூப் 1 தேர்வு
இன்று காலை திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் க்ரூப் 1 தேர்வுகள் நடைபெற்றன. தமிழகத்தில் மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. தேர்வு கண்காணிப்பு பணியில் 980+ பேர் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாகச் சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெற்றது. எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தேர்வுகள் நடந்து முடிந்தன.
இதற்கிடையே க்ரூப் 1 தேர்வுத்தாள்களில் இடம்பெற்றிருந்த கேள்விகள் குறித்து பலரும் இப்போது விவாதித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இப்போது சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. சாதிப் பெயர்களுடன் சில கேள்விகளுக்கு ஆப்ஷன்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக விமர்சனம் கிளம்பியுள்ளது.

சாதி பெயர் சர்ச்சை
அதில் ஒரு கேள்வியில், "ரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், "சுயராஜ்யம்" கிடைக்கும் என்று கூறிய நபரை அடையாளம் காணவும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
அதற்கு வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி, வாஞ்சி ஐயர் ஆகிய நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வ.உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் வாஞ்சி ஐயர் பெயர்கள் சாதிப் பெயர்களுடன் குறிப்பிட்டதை நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள். வஉசி மற்றும் வாஞ்சிநாதன் என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் சொல்வது என்ன
அதேபோல மற்றொரு கேள்வியில் முத்துசாமி பிள்ளை, ஏ ஆர் முதலியார் ஆகியோர் ஆகியவையும் ஆப்ஷனாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் என்பதால் இதில் சாதி பெயர்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பதே நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் சாதிப் பெயர்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை. இவை அனைத்தும் புழக்கத்தில் இருக்கும் பெயர்கள் தான். முழு பெயராகக் குறிப்பிடாமல் போனால் தேர்வாளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே முழு பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும் என கூறி வருகிறார்கள்.
இரண்டு மாதங்களில் முடிவுகள்
முன்னதாக இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான ரிசல்டானது இரண்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் கூறியிருந்தார். இன்று தேர்வு நடந்து முடிந்த நிலையில், இதன் முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சியின் மூலம் இந்த ஆண்டு 15,236 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications