சென்னையில் அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்.. சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்!
சென்னை: சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வந்த வீட்டில் இன்று மதியம் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் அரைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று மதியம் உணவு தயாரிப்பதற்காக கேஸ் சிலிண்டரை ஆன் செய்துள்ளனர். அப்போது அதிலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கூச்சலிட்டபடி அவசரமாக வெளியேறி உள்ளனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய குமார், சரஸ்வதி, ஜெகன், ஆகியோர் என்ன என்று வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் தீ பரவிய நிலையில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
மேலும், சிலிண்டர் வெடித்ததால் வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் குமார், ஜெகன், சரஸ்வதி, யுவராஜ், ஷீலா, ரிஷி மற்றும் நீலக்குமார் ஆகிய ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் உள்ள காலி சிலிண்டர்களை வாங்கி வைத்து, பெட்ரோல் பங்க்குகளில் ஆட்டோ மற்றும் வாகனங்களுக்கு நிரப்பக்கூடிய கேஸை நிரப்பி வீட்டில் உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் அந்த சிலிண்டர்களில் ஏற்கனவே கசிவு ஏற்பட்ட நிலையில் அதனை கவனிக்காமல் இருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த வீட்டிலிருந்த ஒரு பகுதி இடித்து விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications