Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பனை விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் 'திடீர்' ட்விஸ்ட்.. வெளியான சிசிடிவி காட்சி!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பனை விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, குண்டடிபட்ட மணிகண்டனுடன் போலீஸ் எஸ்.ஐ இசக்கிராஜா இரு சக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவரது மகன் மணிகண்டன் (32). இவர் தனது தோட்டத்தில் கள் இறக்குவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் இரண்டு காவலர்கள் கடந்த 7 ஆம் தேதி மணிகண்டனின் வீட்டிற்கு சென்று இது தொடர்பாக விசாரித்துள்ளனர்.

CCTV Twist in Alangulam Shooting SI Isakkiraja Seen with Victim Manikandan

தொடர்ந்து மணிகண்டனை அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பனை மரத்தில் கள் இருக்கிறதா என காண்பிக்கும் படி கூறியுள்ளனர். மணிகண்டன் மரத்தில் ஏறிய சமயத்தில், அவரது சகோதரர் சிவன் பொன்ராஜின் 16 வயது மகனை இசக்கி ராஜா தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் இசக்கி ராஜாவுடன் கட்டி புரண்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இசக்கி ராஜா துப்பாக்கியால் மணிகண்டனை நான்கு முறை சுட்டதில் அவரது இரண்டு கால்களிலும் குண்டுகள் துளைத்து படுகாயமடைந்தார். தொடர்ந்து மணிகண்டனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

இதனிடையே, மணிகண்டன் தன்னை கம்பால் தாக்கியதாகவும் தற்காப்புக்காக அவரை சுட்டதாகவும் இசக்கி ராஜா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இசக்கி ராஜா வேண்டுமென்றே சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அதனால் ஆத்திரத்தில் மணிகண்டன் அவரை தாக்கியதாகவும், அப்போது இசக்கி ராஜா கையில் வைத்திருந்த கம்பு தவறுதலாக அவர் மீது பட்டு காயம் ஏற்பட்டதாக மணிகண்டன் தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சிவன் பொன்ராஜின் 17 வயது மகள் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா உள்பட 3 காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இசக்கி ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனிடையே, சம்பவத்தன்று எஸ்.ஐ இசக்கி ராஜா மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் தோட்டத்துக்கு அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் எஸ்.ஐ இசக்கி ராஜா மஃப்டியில் இருக்கிறார். மணிகண்டன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையில், இசக்கி ராஜா பின்னால் அமர்ந்துள்ளார். இதன் மூலம் சம்பவத்தன்று மணிகண்டன் தனது வீட்டில் இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. அவர், இசக்கி ராஜா சென்றபோது கள் இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+