Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகனுக்கு கை கொடுக்கும் காங்.! விஜய்க்கு நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது..சண்டை செய்த ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது எனவும், நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன் அதன் செயல்பாடுகள் எனக்குத் தெரியும் என கூறியுள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஜனநாயகனுக்கு நடப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் அந்த படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விஜய் தரப்புக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் இருந்து யாரும் குரல் கொடுக்காத நிலையில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மௌனம் காக்கின்றன. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக பேச ஆரம்பித்து இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அந்த கட்சியின் எம்பி ஆன மாணிக்கம் தாகூர், ஜனநாயகன் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயகத்தை முடக்குவது போல் இருப்பதாக கூறி இருந்தார்.

Jothimani jana nayagan Censor Board

ஜனநாயகன் சென்சார் சான்றிதழ்

இந்த நிலையில் தற்போது அடுத்த குரலாக ஒலித்திருக்கிறது எம்பி ஜோதி மணியின் குரல். ஜனநாயகன் படத்துக்கு நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும். ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.

ஜோதிமணி எம்பி

அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை, சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

காங்கிரஸ் ஆதரவு

அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்து கொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக் கொண்டிருக்கிறது. இதை பல கோடிப் பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

படைப்புச் சுதந்திரம் தாக்குதல்

பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+