33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. இந்த முறை கணக்கெடுப்பு பணிகளில் self-enumeration எனப்படும் சுயக் கணக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுயக் கணக்கெடுப்பு முறை என்றால் என்ன? இதை நாம் எப்படிச் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்
இந்தியா தனது மக்கள் தொகைக் கணக்கெடுப்பான 'சென்சஸ் 2027'ஐ முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தத் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே மூலம் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் குறித்த முக்கியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும். ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் சுயக் கணக்கெடுப்பு (self-enumeration) இந்த சர்வேயின் ஒரு முக்கிய அம்சமாகும். இதன் மூலம் குடிமக்கள் அவர்களே தங்கள் தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.

சுயக் கணக்கெடுப்பு என்றால் என்ன?
இது ஒரு புதிய இணையதள அடிப்படையிலான முறையாகும். இதன் மூலம் குடிமக்கள், கணக்கெடுப்பாளர்கள் நேரில் வரும் முன்பே, தங்கள் குடும்பத் தகவல்களை இணையம் வழியாகப் பதிவு செய்யலாம். தமிழ், ஆங்கிலம் 16 மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பலாம்
எப்படிச் செய்ய வேண்டும்!
- முதலில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உங்கள் செல்போன் நம்பரை வைத்து லாகின் செய்யுங்கள்
- அடுத்து மேப் மூலம் உங்கள் இருப்பிடத்தைத் துல்லியமாகப் பதிவிடுங்கள்.
- அடுத்து குடும்ப விவரங்கள் மற்றும் கணக்கெடுப்பு விண்ணப்பத்தை நிரப்புங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் சுய கணக்கெடுப்பைப் பதிவு செய்ததற்காக உங்களுக்குப் பிரத்தியேக Self-Enumeration ஐடி வழங்கப்படும்.
- அதிகாரி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வீட்டிற்கு வரும்போது, இந்த ஐடியை கொடுங்கள்.
- இந்த ஐடியை அவர் உறுதி செய்து கொள்வார். பிறகு நீங்கள் கொடுத்த தகவல்கள் சரி தானா என்பதை மட்டும் செக் செய்து கொள்வார்.
எப்போது
இந்த சுய கணக்கெடுப்பு காலம் என்பது நாடு முழுக்க ஒரே போல இருப்பதில்லை.. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. முதலில் ஏப்ரல் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா, கர்நாடகா, லட்சத்தீவுகள், மிசோரம், ஒடிசா, சிக்கிம், டெல்லி மாநிலங்களில் இந்த போர்ட்டல் ஓபன் ஆகிறது. பிறகு பல மாநிலங்களில் வரிசையாக ஓபன் ஆகும் சூழலில், தமிழகத்திற்கு இந்த போர்ட்டல் ஜூலை 16 முதல் ஜூலை 31ம் தேதி வரை ஓபன் ஆகியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் மக்கள் தொகை பற்றிய சமூக, பொருளாதார டேட்டாவை சேகரித்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு முக்கியமான நிர்வாக மற்றும் புள்ளியியல் நடவடிக்கையாகும். இந்த பணிகளை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் மேற்கொள்கிறது.
நமது நாட்டில் தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். அதன்படி பார்த்தால் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக அப்போது நடத்தப்படவில்லை.
33 கேள்விகள்
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் 33 கேள்விகள் கேட்கப்படும். வீட்டுத் தலைவரின் பாலினம், உணவு, குடும்பத்தில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் இதில் அடங்கும். இரண்டாம் கட்டமாக, சாதி குறித்த தகவல்கள் 2027 பிப்ரவரியில் சேகரிக்கப்படும். 2ம் கட்ட கணக்கெடுப்பிற்கு என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த கணக்கெடுப்பு இந்தாண்டே முடிந்தாலும் கூட அதை எல்லாம் தொகுதிக்கு வெளியிடக் காலம் பிடிக்கும். அதன்படி பார்க்கும்போது கணக்கெடுப்பு டேட்டா 2027ஆம் ஆண்டிலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே முந்தைய கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடும்போது விரைவானது தான். இந்த முறை சர்வே முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடப்பதாலேயே இவ்வளவு சீக்கிரம் வெளியாகிறது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications