"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக 327 தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்திற்கு இன்று நியமனம் செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
327 பார்வையாளர்கள்
இந்நிலையில் தான் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,பொது பார்வையாளர்களாக (General Observers) 136 பேர், காவல் பார்வையாளர்களாக (Police Observers) 40 பேர், செலவு பார்வையாளர்களாக (Expenditure Observers) 151 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை (மார்ச் 18) முதல் பணியை தொடங்க உள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளில் இவர்கள் பணி செய்ய உள்ளனர். அதேபோல் தமிழகம் மட்டுமின்றி தேர்தல் நடைபெற உள்ள கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட இடங்களுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியை எடுத்து கொண்டால் அங்குள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுபார்வையாளர்கள், 4 காவல் பார்வையாளர்கள், 17 செலவு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடக்கும் 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்று மொத்தம் 1111 பேர் மத்திய பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனம் என்பது வாக்காளர்களுக்கும் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பது, வேட்பாளர்களின் செலவு கணக்குகளைகண்காணிப்பது உள்ளிட்டவையாகும். தற்போது தமிழகம், புதுச்சேரி உள்பட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தேர்தல் ஆணையம் பிடியை இறுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் விடுவிப்பு.. துரைகுமார் நியமனம்.. EC அதிரடி -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications