சூளும் கரு மேகங்கள்.. 3 மாவட்டங்களை சுத்துப்போடும் மழை! அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தற்போது கூறியுள்ளது.
அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணிக்கு மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இம்மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications