சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சருடன் நெருங்கி பழகியது.. நான் செய்த முட்டாள்தனம்.. மருத்துவருடன் சாந்தினி பேசிய ஆடியோ ரிலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சருடன் நான் நெருங்கி பழகியதுதான் நான் செய்த முட்டாள்தனம் என மணிகண்டனின் நண்பரான டாக்டரிடம் சாந்தினி கதறிய ஆடியோ வெளியாகியுள்ளது.

நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. இவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர். இவர் மலேசிய சுற்றுலாத் துறையில் அரசு பதவி வகித்து வருகிறார். இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டு தன்னை கர்ப்பமாக்கி 3 முறை கருகலைப்பு செய்துள்ளார் என சாந்தினி புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டனோ சாந்தினி யாரென்றே தெரியாது என தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு ஆதரவாக அவரது மனைவி, சாந்தினி மீது அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அடுக்கடுக்கான கொடுமைகள்.. குமுறிய நடிகை சாந்தினி.. எல்லாமே பொய்.. போலீசுக்கு போன மணிகண்டன் மனைவி அடுக்கடுக்கான கொடுமைகள்.. குமுறிய நடிகை சாந்தினி.. எல்லாமே பொய்.. போலீசுக்கு போன மணிகண்டன் மனைவி

கோபாலபுரம்

கோபாலபுரம்

இந்த நிலையில் நடிகை சாந்தினியும் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரும் கருக்கலைப்பு தொடர்பாக பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இவை அதிமுக ஆட்சியில் இருந்த போது அவர் பேசியுள்ளார். இதில் மணிகண்டன் செய்த விவகாரத்தால் தனது வயிற்றுப்பகுதியில் கருப்பாக இருக்கிறது. இது என்ன என எனது அம்மா கேட்கிறார், நான் என்ன பதில் சொல்வது, எனக்கு செய்த கர்மவினைதான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்கிறார்.

முதல்வரிடம் புகார்

முதல்வரிடம் புகார்

நான் எத்தனை முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் தான் எனக்கு கருக்கலைப்பு செய்தீர்கள். நான் தொடர்பு கொண்டாலும் மணிகண்டன் போனை எடுப்பதில்லை. என்னை அவாய்ட் செய்கிறார். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை முதல்வரிடம் (எடப்பாடி பழனிச்சாமி) காண்பித்தால் மணிகண்டன் நிலை என்னவாகும்?

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

மணிகண்டன் என்னை எத்தனையோ முறை டார்ச்சர் செய்தும் கருக்கலைப்பு செய்தும் நான் அதை யாரிடமும் புகாராக சொன்னதே இல்லை. நான் மலேசியாவில் முக்கிய புள்ளியாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்த பிரச்சினையை நான் முதல்வரிடம் (முன்னாள்) எடுத்துச் செல்ல முடியும்.

Recommended Video

    திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி Manikandan துன்புறுத்தினார் .. குமுறிய Shantini Deva
    மக்களுக்கு

    மக்களுக்கு

    அவரிடம் போய் சொல்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. பழகிய எனக்கும் எதையும் செய்யவில்லை, அவரது தொகுதி மக்களுக்கும் மணிகண்டன் எதுவும் செய்யாததால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டது. நான் அரசின் நேரடித் தொடர்பில் இருந்ததால் அவருக்கு பதவி பறிபோக இருந்தது எனக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே தெரியும் என சாந்தினி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

    English summary
    Chandini releases her conversation with Gopalapuram Private hospital doctor who is friend of Ex Minister Manikandan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X