Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம்.. இன்று முதல் பத்திரப்பதிவு நாளிலேயே கிடைத்துடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பட்டாவில் தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்வது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பட்டா பெறுவதில் நிலவிவந்த சிக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
பொதுவாக, பாடுபட்டு நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு படாதபாடு படவேண்டியிருக்கிறது.. இதற்காக நடையாய் நடந்து காலவிரயம் ஏற்பட்டது.. எத்தனையோ பேருக்கு, பட்டா வாங்க முடியாமல் சம்பந்தப்பட்ட நிலம் கைநழுவி சென்ற சம்பவமும் உண்டு.. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கெல்லாம் இன்று முதல் விடியல் பிறந்துள்ளது.

சீர்திருத்தங்கள்: பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது... இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்தவகையில், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Patta automatic system Tamil Nadu Registration Department Revenue Department Patta name change

அதாவது, பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெற தனது கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

சொத்து ஆவணங்கள்: இந்த புதிய நடைமுறையின்படி, ஒருவர் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி அவருக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இன்று ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார் பதிவாளர்: கடந்த சில ஆண்டுகளாகவே, சார் பதிவாளர் அலுவலகங்களில் இதற்கான பணி நடந்து வந்தநிலையில், இன்று முதல் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. இதன் அடிப்படையில், பொதுமக்கள் இணையதளத்தில் இருந்து பெயர் மாற்றப்பட்ட பட்டாவின் பிரதியை சில மணி நேரத்திலேயே எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+