சமையல் துறையை இளக்காரமாகத்தான் பார்த்தாங்க! ஆனால் இப்போது! நாதழுதழுத்த செஃப் தாமு
சென்னை: சமையல் துறையை இளக்காரமாகத்தான் நிறைய பேர் பார்த்தார்கள். ஆனால் இப்போது எங்கள் துறைக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது பெருமையாக இருப்பதாக பத்ம விருது பெற்ற செஃப் தாமு என்கிற தாமோதரன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதுகுறித்து செஃப் தாமு சன் நியூஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம் இருக்கிறது. எதிர்பார்க்காத ஒன்று. இவ்வளவு பெரிய தேசிய விருது கிடைப்பது பெருமையாக இருக்கிறது. இது போன்று விருதுகள் இருப்பது தற்போது சமையல் கலை பயிலும் மாணவர்களுக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது.

இந்த விருதை மத்திய அரசு எனக்கு கொடுப்பதை நான் சந்தோஷமாக கருதுகிறேன்.
இந்த விருது எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்!
இதனால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த விருதை சமையல் கலை படிக்கும் மாணவர்களுக்கும் ஹோட்டல்களில் இருக்கும் செஃப்களுக்கும் நான் டெடிகேட் செய்கிறேன்.
இந்த சமையல் துறையை நிறைய பேர் இளக்காரமாகத்தான் பேசினார்கள். ஆதரவாக யாருமே பேசவில்லை. இந்த விருது மூலமாக செஃப் கம்யூனிட்டிக்கே ஒரு பெரிய பெயர் கிடைத்திருக்கிறது. இதனால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
என் வீட்டை சுற்றி பார்த்தால் கின்னஸ் விருது உள்பட 150 விருதுகள் இருக்கும். இதையெல்லாம் விட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விருது என்பது பெருமையை கொடுக்கிறது. இதெல்லாம் கிடைக்குமா என ரொம்ப நாளாக நான் கனவு கண்டிருக்கிறேன். கஷ்டப்பட்டேன், அதற்கான பலன் கிடைத்திருக்கிறது.
இதற்காக மத்திய அரசு, மாநில அரசுக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு உருதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். சமையல் தொழில் அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. அதை அங்கீகரித்து தற்போது விருது கிடைத்துள்ளது. மாநில அரசும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை கொடுத்தால் எங்களை போன்றவர்களுகக்கு ஊக்கமாக இருக்கும் என கோரிக்கை விடுக்கிறேன். 40 ஆண்டுகளாக எனது உழைப்புக்கு கிடைத்த கவுரமாக இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 7 பேருக்கு பத்மவிபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 13 பேருக்கு பத்மஸ்ரீ என 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, தெலுங்கு திரைப்பட நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சமையற்கலை அறிஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications