நடுநடுங்க வைத்த சவுகார்பேட்டை.. கொலையாளிகள் 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
3 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. சமீப காலமாக கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.
எல்லா சொத்துக்களையும் 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர கேட்டு வந்தார்.. அதற்கு மாமனார் மறுக்கவும்தான், தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்த ஜெயமாலா, மாமனார், மாமியார், கணவனை சுட்டு தள்ளினார்.
இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்ட போலீசார், கொலை செய்துவிட்டு புனேவுக்கு காரில் தப்பி சென்று கொண்டிருந்த 3 பேரை விரட்டி மடக்கி பிடித்தனர்.. இந்த வழக்கில் கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம் என்ற 3 பேர் புனேவில் கைதாகினர்.. அவர்கள் தமிழகம் அழைத்து வரவழைக்கப்பட்டு சைதாப்பேட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட மெயின் குற்றவாளி ஜெயமாலா எங்கே என்று தெரியவில்லை... புனேவில் மாயமாகி உள்ளஅவரை பிடிக்க நம் போலீசார் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.. இன்று அல்லது நாளைக்குள் ஜெயமாலாவையும் கைது செய்து இங்கே அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications