சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுநடுங்க வைத்த சவுகார்பேட்டை.. கொலையாளிகள் 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

3 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

Chennai 3 people shot dead and 3 under custody

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. சமீப காலமாக கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.

எல்லா சொத்துக்களையும் 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர கேட்டு வந்தார்.. அதற்கு மாமனார் மறுக்கவும்தான், தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்த ஜெயமாலா, மாமனார், மாமியார், கணவனை சுட்டு தள்ளினார்.

இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்ட போலீசார், கொலை செய்துவிட்டு புனேவுக்கு காரில் தப்பி சென்று கொண்டிருந்த 3 பேரை விரட்டி மடக்கி பிடித்தனர்.. இந்த வழக்கில் கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம் என்ற 3 பேர் புனேவில் கைதாகினர்.. அவர்கள் தமிழகம் அழைத்து வரவழைக்கப்பட்டு சைதாப்பேட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை.. மறக்க முடியாத ஜெயமாலா... ஒரு பிளாஷ்பேக்! சபரிமலை.. மறக்க முடியாத ஜெயமாலா... ஒரு பிளாஷ்பேக்!

ஆனால், சம்பந்தப்பட்ட மெயின் குற்றவாளி ஜெயமாலா எங்கே என்று தெரியவில்லை... புனேவில் மாயமாகி உள்ளஅவரை பிடிக்க நம் போலீசார் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.. இன்று அல்லது நாளைக்குள் ஜெயமாலாவையும் கைது செய்து இங்கே அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Chennai 3 people shot dead and 3 under custody
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X