நடுநடுங்க வைத்த சவுகார்பேட்டை.. கொலையாளிகள் 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
3 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. சமீப காலமாக கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.
எல்லா சொத்துக்களையும் 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர கேட்டு வந்தார்.. அதற்கு மாமனார் மறுக்கவும்தான், தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்த ஜெயமாலா, மாமனார், மாமியார், கணவனை சுட்டு தள்ளினார்.
இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்ட போலீசார், கொலை செய்துவிட்டு புனேவுக்கு காரில் தப்பி சென்று கொண்டிருந்த 3 பேரை விரட்டி மடக்கி பிடித்தனர்.. இந்த வழக்கில் கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம் என்ற 3 பேர் புனேவில் கைதாகினர்.. அவர்கள் தமிழகம் அழைத்து வரவழைக்கப்பட்டு சைதாப்பேட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட மெயின் குற்றவாளி ஜெயமாலா எங்கே என்று தெரியவில்லை... புனேவில் மாயமாகி உள்ளஅவரை பிடிக்க நம் போலீசார் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.. இன்று அல்லது நாளைக்குள் ஜெயமாலாவையும் கைது செய்து இங்கே அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications