சென்னை ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்.. பயணியின் பையை சோதனை செய்த.. கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ஷாக்
சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 56 கோடி மதிப்புடைய 5.620 கிலோ கொக்கயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.இந்த விமானத்தில் பெரும் அளவு போதை பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கண்காணித்தனர்.

நைஜீரிய வாலிபர் உள்பட 4 பேர் கைது
அப்போது வட மாநிலங்களைச் சேர்ந்த 2 பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்தனர்.வட மாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் டெல்லி அல்லது மும்பைக்கு செல்லாமல் சென்னைக்கு வந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 2 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதை அடுத்து இருவரையும் விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரித்தனர். உடைமைகளையும் சோதனை நடத்தினர்.
கொக்கயின் போதைப்பொருள் பறிமுதல்
அவர்களுடைய உடமைகளில் பெர்ரெரொ ரோச்சர் சாக்லேட்டுகள், கேன்கள் அதிக அளவில் இருந்தன. அவைகளை சுங்க இலாகா அதிகாரிகள் திறந்து பார்த்து சோதித்தனர். அதில் சாக்லேட்டுகளுக்கு பதிலாக கேப்சூல் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் கேப்சூல்களை ஆய்வு செய்த போது, இது சாக்லேட்களுக்கு பதில் பவுடராக இருந்தது. பவுடர்களை ரசாயன ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்ததில் கொக்கயின் போதைப் பொருட்கள் என்று தெரிய வந்தது. 2 பேரிடம் இருந்து 5 கிலோ 620 கிராம் கொக்கயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை - சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள்
இதை அடுத்து இருவரையும், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்கு, கூலிக்காக போதை கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதை பொருள் அடங்கிய சாக்லேட்கள் கொடுத்து இதை சென்னை விமான நிலையத்தில் சென்று இறங்கியதும் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்து ரூ.56 கோடி மதிப்புடைய கொக்கையின் போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் மத்திய போதைப் பொருள் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மும்பை, டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் பயணிகள் வருவதாக தெரியவந்தது.மும்பைக்கு வந்த போதை கடத்தல் ஆசாமியும் டெல்லியில் நைஜீரிய வாலிபரும் பிடிப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் வந்து வாங்க இருந்த சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications