தமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்!
தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்காமல் மேற்கு வங்கம் நோக்கி சென்றது. இதனால் தமிழகத்திற்கு வெப்ப காற்று வந்தது. இந்த வெப்ப காற்று காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
முக்கியமாக சென்னையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

வெதர்மேன் போஸ்ட்
இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் இன்று காலை நல்ல மழை பெய்தது. ஆனால் தற்போது கொஞ்சம் மழை குறைந்துள்ளது. மேற்கு தமிழ்நாடு உள் மாவட்டங்களில் இடி, மின்னல் இருக்கும். ஆனால் சென்னையில் இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

சென்னை நிலை
ஆனால் கடந்த 3 நாட்கள் வெப்பநிலை இருந்த அளவிற்கு இன்று சென்னையில் வெப்பநிலை இருக்காது. தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், அதன் அருகே உள்ள மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். சென்னையிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னையில் கடலோர பகுதிகளில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். ஆனால் சென்னை ஏர்போர்ட், போரூர், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும்.

அதிக வெப்பம்
இங்கு கடல் காற்று வர தாமதம் ஆகும். இதனால் அங்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதேபோல் உள் வடமாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதேபோல் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

புயல் கடந்தது
அதே சமயம் ஆம்பன் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் இன்று இடிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. 160 கிமீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது ஆம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து மோசமாக பாதிக்கப்பட்டது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications