தமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்!
தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்காமல் மேற்கு வங்கம் நோக்கி சென்றது. இதனால் தமிழகத்திற்கு வெப்ப காற்று வந்தது. இந்த வெப்ப காற்று காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
முக்கியமாக சென்னையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

வெதர்மேன் போஸ்ட்
இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் இன்று காலை நல்ல மழை பெய்தது. ஆனால் தற்போது கொஞ்சம் மழை குறைந்துள்ளது. மேற்கு தமிழ்நாடு உள் மாவட்டங்களில் இடி, மின்னல் இருக்கும். ஆனால் சென்னையில் இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

சென்னை நிலை
ஆனால் கடந்த 3 நாட்கள் வெப்பநிலை இருந்த அளவிற்கு இன்று சென்னையில் வெப்பநிலை இருக்காது. தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், அதன் அருகே உள்ள மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். சென்னையிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னையில் கடலோர பகுதிகளில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். ஆனால் சென்னை ஏர்போர்ட், போரூர், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும்.

அதிக வெப்பம்
இங்கு கடல் காற்று வர தாமதம் ஆகும். இதனால் அங்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதேபோல் உள் வடமாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதேபோல் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

புயல் கடந்தது
அதே சமயம் ஆம்பன் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் இன்று இடிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. 160 கிமீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது ஆம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து மோசமாக பாதிக்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications