இபி ஸ்மார்ட் மீட்டரை விடுங்க.. இனி தண்ணீருக்கும் வரும் மீட்டர்.. சென்னையில் அதிரடி முடிவு! முக்கியம்
சென்னை: சென்னை மாநகராட்சி மெட்ரோ குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது.டாஸ்மாக் தொடங்கி மின்சாரத்துறை வரை எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உதாரணமாக தமிழ்நாடு முழுக்க விரைவில் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும்.

தமிழ்நாட்டில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலில் சோதனை முயற்சியாக தி நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி சுமார் 1.10 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது.
இதை அடுத்து சென்னையின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் தமிழ்நாடு முழுக்கவும் நடைமுறை படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் மீட்டர் வாங்கும் டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. 3 கட்டமாக தமிழ்நாடு முழுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்த முடிவு செய்துள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொதுவாக துல்லியமாக மின்சாரத்தை கணக்கிட உதவும். தற்போது மின்சாரத்தை கணக்கிட அதற்காக மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து அளவீடு செய்வார்கள் . அவர்கள் கொடுக்கும் குறிப்பை வைத்தே மின்சாரம் கணக்கிடப்படும்.
ஆனால் ஸ்மார்ட் மீட்டர் அப்படி அல்ல. ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால் நாம் பயன்படுத்தும் மின்சாரம் தொடர்பான ரீடிங் நமக்கு காட்டுவது மட்டுமின்றி மின்சார துறை அலுவலகத்திற்கும் காட்டும். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இது துல்லியமாக அப்டேட் செய்யப்படும். இதனால் மின்சார ஊழியர்கள் வீட்டிற்கு வராமலே அளவு எடுக்க முடியும்.
மேலும் யூனிட் விவரங்கள் மிக மிக துல்லியமாக இருக்கும். இதனால் மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு, மக்களுக்கு துல்லியமாக கட்டணம் நிர்ணயம் செய்ய 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது. தி நகரில் நிறைவேற்றப்பட்ட திட்டம் தமிழ்நாடு முழுக்க அடுத்து கொண்டு வரப்பட உள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்: இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி மெட்ரோ குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.

அதன்படிஇந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களிலும் தண்ணீர் மீட்டர்களை நிறுவ மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நுகர்வு அடிப்படையில் விரைவில் தண்ணீருக்கு பணம் செலுத்துவார்கள்.
தற்போது மக்கள் மீட்டர் இல்லாத தண்ணீருக்கு மாதம் ரூ.84 கட்டணமாக செலுத்தி வருகின்றனர். எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினாலும் இதுவே கட்டணமாக இருந்து வந்தது. அதேபோல் கடைகளில் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது 24,000 மீட்டர்கள் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கட்டணம் வசூல் சரி செய்யப்பட்டு 2021-22ல் ₹57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் குடியிருப்பு கட்டிடங்களிலும் இதேபோல் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications