பெரிய சிக்கல்.. முடங்கியது சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே பணிகள்.. ஆற்று மணல் இல்லாததால் நிறுத்தம்
சென்னை: திருப்பத்தூரில் ஆம்பூர் அருகே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக இங்கே பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) L&T உடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் இங்கே நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாலாற்றை ஒட்டி வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கண்டனேரி கிராமத்தில் உள்ள அரசு குவாரியில் இருந்து ஆற்று மணல் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கே பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பணிகள் நிறுத்தம்: செப்டம்பர் 12 முதல் மாநிலத்தில் உள்ள குவாரிகளில் அமலாக்க இயக்குனரகம் (ED) நடத்திய சோதனை காரணமாக மணல் அள்ளுவதில் பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இதுவே ஆற்று மணல் வழங்கப்படாததற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், குவாரியில் இருந்து தினமும் 1,000 யூனிட் மணல் தேவை என்ற நிலையில், இரண்டு நாட்களுக்கு மட்டும் 300 யூனிட் மணல் வழங்கப்பட்டது.
அதன்பின் இந்த மணலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து குவாரியில் இருந்து மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தாழ்வாரப் பணியின் கான்கிரீட் தூண்களை அமைக்கும் சென்ட்ரிங் பணிகள் போன்ற பிற பணிகள் வழங்கப்பட்டன.
விதிமுறைகளின்படி, NHAI ஆல் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு, தரைமட்டத்திலிருந்து மூன்று மீட்டருக்கு மேல் உள்ள அமைக்கப்படும் கட்டுமான பணிகளுக்கும், ஆற்று மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதன் நீடித்த தன்மைக்காக இந்த விதி உள்ளது. அதன்படி, ஆம்பூரில் மேம்பாலப் பணிக்கான மூன்று தூண்களுக்கான (ஸ்பான்கள்) சென்ட்ரிங் பணிகள் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தயாராக உள்ளது. ஒவ்வொரு தூணும் 25 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால், ஆற்று மணல் வழங்கப்படாததால், தூண்களில் சிமென்ட் கான்கிரீட் கலவை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் டிசம்பருக்குள் இந்த சாலை திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்தேகம்: சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள சாலை இந்த வருட இறுதிக்குள் முடிந்து ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
வருகிறது பாலம்: இந்த நிலையில்தான் இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவாதம்: இந்த நிலையில்தான், சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள சாலை இந்த வருட இறுதிக்குள் முடிந்து ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கண்ட பாலத்தின் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அதோடு சென்னை பக்கம் இன்னும் சாலை பணிகள் பல இடங்களில் தொடங்கவே இல்லை. இன்னும் பல இடங்களில் 10 சதவிகிதம் மட்டுமே பணிகள் நடந்து உள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி இங்கே சாலை பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லையே என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications