உஸ் அப்பாடி! இனி கிளாம்பாக்கம் செல்வது ரொம்ப சிம்பிள்! நோ காம்ப்ளிகேஷன்! செம அப்டேட்!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை- தாம்பரம் வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் இன்று முதல் இரவு நேரங்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் மற்ற பகுதிகளில் இருந்து செல்வதற்கு பொது போக்குவரத்து இணைப்புகள் இல்லை என்பது பயணிகளின் குறையாகவே இருந்து வருகிறது.

இதனால் சென்னையின் நடுபகுதியில் பேருந்து நிலையம் அமைத்தால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருந்திருக்கும் என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆட்சேபனைகள் எழுந்தன. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: இதையடுத்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, செங்கோட்டை, விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 400 கோடியாகும். பேருந்து நிலையத்திற்கு எளிதாக வந்து செல்ல வசதியாக வண்டலூர் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
அது போல் மெட்ரோவை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.
கட்டுமான பணிகள் : அவர் பேசுகையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொருத்தவரை அதன் கட்டுமான பணிகள் வேகமாகவே நடந்து வருகிறது. அங்கு அடுத்த மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் அவர்களுக்கு பொது போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும் வகையில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடற்கரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.
சென்னை கடற்கரை- கூடுவாஞ்சேரி: மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். இவ்வாறு ரயில்வே கூறப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications