சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக மீண்டும் சென்னை வந்தடையும் சுற்றுவட்ட ரயில் சேவைகள் இன்று தொடங்கியது.
செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள், மூர்மார்கெட் அல்லது கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்துதான் அரக்கோணம் செல்லும் நிலை இருந்தது. இதனால் சென்னை கடற்கரை, செங்கல்பட்டு அரக்கோணம், இடையே சுற்றுவட்ட ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை கடற்கரை சுற்றுவட்ட ரயில் சேவையை தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனால் இன்று முதல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-திருமால்பூர்-அரக்கோணம்- சென்னை கடற்கரைக்கு சுற்றுவட்ட மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கி உள்ளது.
இந்த ரயில் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அங்கிருந்து அரக்கோணம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், வழியாக மீண்டும் மாலை 4.10க்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், வழியாக மீண்டும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். இந்த புதிய சுற்றுவட்ட ரயில் சேவை வசதியால் சென்னை புறநகர் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications