இந்தாங்க பிடிங்க.. சென்னையிலுள்ள ஒவ்வொரு கவுன்சிலருக்கும் இனி 60 லட்சம்! மேயர் அறிவிப்பு
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கான பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியா, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.. கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ.4,464 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இம்முறை சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் ரூ.5,1245.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் போக்குவரத்து, விளையாட்டு, குப்பைகளை அகற்றுகள், இளைஞர்கள் நலன், பூங்கா பராமரிப்பு, கல்வி, மாணவர்கள் நலன், பேருந்து முனையங்கள் மேம்பாடு, சாலை பராமரிப்பு என்பது தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 இடங்களில் ஃபுட் கோர்ட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் வடசென்னையில் 2 பேட்மிண்டன் கோர்ட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து மேலாண்மைக்காக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன நெரிசல் குறைவதோடு, கூடுதல் வருவாயும் மாநகராட்சிக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதாவது கவுன்சிலர்களுக்கு தங்களின் வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் அளிக்கப்படும். அதனை நடப்பு ஆண்டில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு செலவிட முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications