சென்னையில் சேத்துப்பட்டில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்! ரயில் சேவைகள் பாதிப்பா? வெளியான தகவல்
சென்னை: சென்னையில் சேத்துப்பட்டு பகுதியில் திடீரென சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இருப்பினும், இந்த விபத்து பணிமனை உள்ளே நிகழ்ந்ததால் இதனால் ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்துத் துறையாக ரயில்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பு, வேகம் எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பொதுமக்கள் அதிகம் ரயில்களையே பயன்படுத்துகிறார்கள். பஸ்களை விட ரயில்கள் பல மடங்கு பாதுகாப்பானவை என்ற போதிலும் சில நேரங்களில் ரயில்களிலும் விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன.

இன்று மாலை சென்னையில் ரயில்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு பணிமனையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளைச் சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் பணிமனைக்குள்ளே ரயில் தடம் புரண்டதால்.. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை. அப்பகுதியில் வழக்கம் போலவே ரயில் சேவைகள் இயக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications