ஸ்டாலினின் கனவு திட்டத்தில் அதிரடி.. சென்னையில் 2 லட்சம் மரக்கன்றுகள்.. உறுதி தந்த கமிஷனர் ககன்தீப்
சென்னையில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக ககன்தீப் தெரிவித்துள்ளார்
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரம் முழுவதும் மரம் வளர்ப்பு முறையை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது.. இதற்காக ஆணையர் ககன்தீப் சிங் பேடி பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த மாதம் கூட, 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மாநகராட்சி கமிஷனர் நடத்தினார்..

வேண்டுகோள்
அப்போது, குடியிருப்பும் நல சங்கங்களும் குறைந்தது ஒரு ஆண்டுக்கு 500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடவேண்டும் என்றும், 6 அடி உயரத்தில் இருந்தால் அவை பாதுகாப்பாக வளரும் சூழல் இருக்கும் என்றும் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், அப்போது அவர் பேசும்போது, சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம், அதற்கு முக்கியமாக மக்களின் பங்கு அதிகம் எங்களுக்கு தேவை... மரம் நடுவது மக்கள் இயக்கம்..

விருதுகள்
மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்பு நல்ல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பாக விருது வழங்கப்படும் என்றும் உற்சாகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், சென்னை மாநகரை பசுமையாக்க வருடத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமிஷனர் ககந்தீப்சிங் தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது...

மரக்கன்றுகள்
ராஜீவ்காந்தி சாலை கூவம் ஆற்றின் கரையோரத்தை பசுமையாக்கும் வகையில், கமிஷனர் ககந்தீப்சிங் பேடி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்... அதேபோல, புகைப்படக் கலைஞர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.. இந்த கலைஞர்கள் புகைப்படம் நடுவதை கமிஷனர் கேமராவில் படமெடுத்து அவர்களை கவுரவப்படுத்தினார்.

2 லட்சம்
இறுதியில் நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிங்கார சென்னை 2.0"திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.. இதனால் பசுமையும்,சுத்தமான காற்றும் குளிர்ச்சியும் சென்னைவாசிகளுக்கு கிடைக்கும்.. திருவனந்தபுரம், பெங்களூருவில் அதிகளவு மரங்கள் இருப்பதை போன்று சென்னையிலும் காலியாக உள்ள இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் மரங்கள் வளர்க்கப்படும்" என்று உறுதி தந்தார்.
Recommended Video

மகிழ்ச்சி
சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக்குவோம் என்று ஏற்கனவே திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.. சென்னையின் பழைய பொலிவை மீட்டு கொண்டு வரும் வகையில், இதற்கான பணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.. இந்த திட்டத்துக்கு மேலும் முக்கியத்துவம் தரும் வகையில், பட்ஜட் கூட்டத்தொடரில் சென்னைக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ள 2 லட்சம் மரங்கள் நடும் திட்டமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications