கொரோனா : சென்னை ரங்கநாதன் தெரு கடைகளை 10 நாட்களுக்கு மூட அறிவுறுத்தல்- புரசை சரவணா ஸ்டோருக்கு சீல்!
சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூடுவதற்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. முன்னதாக சென்னை புரசைவாக்கத்தில் அரசு அறிவுரையை மீறி திறந்த சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடி சீல் வைக்கப்பட்டது.
Recommended Video
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பிரதான வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் ஆகியவைகள் மட்டும் திறந்திருந்தன. இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் வேலுமணியுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வருகிற பயணிகளையும் பரிசோதித்து வருகிறோம். சென்னை விமான நிலையத்தில் இதுவரை 1.84 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2, 635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் கண்காணிப்பில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொடர்பான சோதனைகளில் ஏற்கனவே ஒருவருக்கு மட்டும்தான் பாஸிட்டிவ் என வந்தது. நேற்றைய சோதனையில் 38 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட்தான் வந்தது என்றார்.
புரசைவாக்கம்
இதனிடையே சென்னை புரசைவாகத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை மாநகராட்சி அதிகாரிகள் பகல் 2 மணியளவில் மூட உத்தரவிட்டனர். ஆனால் மாலை 4 மணிக்கு சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் புரசைவாக்கம் கடையை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications