வாகன ஓட்டிகளுக்கு "ஆப்பு".. வெயிட் பண்ணி "தூக்கிய" மாநகராட்சி.. யாரந்த ஓனர்கள்.. வெளியானது அறிவிப்பு
சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், அதற்கான அதிரடியை தற்போது துவங்கி உள்ளது.
அதுமட்டுமல்ல, கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் வார்னிங் தந்திருந்தார்.

காரணம் என்ன: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக சிலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோன்ற வாகனங்களால் சென்னையில் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது... சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறைய இடங்களில் நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்கிறார்கள்..
மேலும், பார்க்கிங் வசதி ஏற்படுத்தியும்கூட, பல இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு பலர் வெளியூர்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.. இதனால் அந்த வாகனங்கள் அங்கேயே நிற்க வேண்டியதாகிவிடுகிறது. மேலும் தேவையில்லாத பதட்டமும், குழப்பமும் ஏற்படுதால், மாநகராட்சி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.
பிரியா அறிவிப்பு: இதற்கு பிறகு, மேயர் பிரியா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அதில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக கேட்பாரற்று வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன.. போக்குவரத்து போலீசாரும், சென்னை போலீசாரும் இணைந்து, இந்த வாகனங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.. அதுமட்டுமல்லாமல், வாகனங்களை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
இதுவரை, மாநகராட்சி பகுதிகளில் 1038 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது... இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்திட அறிவுறுத்தியிருக்கிறோம். அதற்கு பிறகும், அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை, வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சென்னை மாநகர போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு ஏலம் விட முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்திருந்தார்.
ஏலம் ஆரம்பம்: இப்படி ஒரு அறிவிப்பு வெளியான பின்னரும்கூட,கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் யாரும் மீட்க வரவில்லை..
எனவே, ஏற்கனவே அறிவித்திருந்தபடி, நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகளை மாநகராட்சி இன்றைய தினம் துவங்கிவிட்டது.. கள ஆய்வில் 1308 வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதெல்லாம் யாருடைய வாகனங்கள்? ஓனர் யார்? என்றெல்லாம் இன்னும் தெரியவில்லை.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications