என்ன செய்வது?.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை! v
சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்
போலீசில் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆதரவு
இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோவை, திருப்பூரில் போராட்டங்கள் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது . 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

எப்படி போராட்டம்
இந்த நிலையில் இதேபோல் போராட்டம் தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.நேற்றே தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. கோவை, திருப்பூர், சேலம் பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இஸ்லாமியர்கள் மட்டுமின்று இந்துக்களும் இந்த போராட்டத்தில் பெரிய அளவில் கலந்து கொண்டனர்.

என்ன எச்சரிக்கை
இந்த நிலையில் இந்த போராட்டம் விரிவடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து வருகிறார்கள்.

அரசியல் ரீதியான
இந்த போராட்டம் காரணமாக அரசியல் ரீதியான பிரச்சனை வரலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மெரினா புரட்சிக்கு இணையாக இதனால் போராட்டம் நடக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க பாதுகாப்பை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவே இன்று ஆலோசனை நடந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை 2 மணி நேரமாக ஆலோசானை நடந்து வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications