என்ன செய்வது?.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை! v
சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்
போலீசில் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆதரவு
இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோவை, திருப்பூரில் போராட்டங்கள் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது . 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

எப்படி போராட்டம்
இந்த நிலையில் இதேபோல் போராட்டம் தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.நேற்றே தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. கோவை, திருப்பூர், சேலம் பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இஸ்லாமியர்கள் மட்டுமின்று இந்துக்களும் இந்த போராட்டத்தில் பெரிய அளவில் கலந்து கொண்டனர்.

என்ன எச்சரிக்கை
இந்த நிலையில் இந்த போராட்டம் விரிவடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து வருகிறார்கள்.

அரசியல் ரீதியான
இந்த போராட்டம் காரணமாக அரசியல் ரீதியான பிரச்சனை வரலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மெரினா புரட்சிக்கு இணையாக இதனால் போராட்டம் நடக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க பாதுகாப்பை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவே இன்று ஆலோசனை நடந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை 2 மணி நேரமாக ஆலோசானை நடந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications