பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையின் முக்கியப் போக்குவரத்து சேவையான சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இருக்கின்றன. தண்டவாளப் பணிகள், சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11, 12) சில ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே திருவள்ளூர் பணிமனையில் 11-ஆம் தேதியான இன்று சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை 7 மணி நேரம் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்காரணமாக, சனிக்கிழமை (ஏப்ரல் 11) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூர் செல்ல வேண்டிய ரயில் அதற்குப் பதிலாக திருநின்றவூர் வரை இயக்கப்படும்.
பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்:
சென்னையில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அதிகாலை 4.30 மணி, காலை 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருவள்ளூர் செல்ல வேண்டிய ரயில்கள், திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருவள்ளூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணி, 5.55 மணிகளில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரை செல்ல வேண்டிய ரயில் திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு பொன்னேரி செல்ல வேண்டிய இமு ரயில், திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications