தினகரன் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் மறுப்பு.. கோர்ட்டை நாடிய அமமுக.. இறுதியில் அனுமதி அளித்த கோர்ட்
Recommended Video

சென்னை: சென்னை மகாகவி பாரதியார் நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் மக்கள் நலப் பணிகள் செய்யப்படாததை கண்டித்து தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ்செல்வன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னை மகாகவி பாரதி நகரில் வரும் 17-ஆம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில், அமமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து, எங்களது கட்சி சார்பில் வரும் 17-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இதற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தோம். காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். எனவே, போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் போராட்டத்துக்கு அனுமதி கோரிய இடத்தில் 300 பேருக்கு மேல் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 300 பேருக்கு மேல் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம், சட்டம் ஒழுங்குக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்து புதிதாக மனு தாக்கல் செய்யும் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications