செந்தில் பாலாஜி கைது சட்டரீதியானது.. ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கியது.
இதனால் வழக்கை விசாரிக்கும் 3ஆவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு 3 நாட்கள் விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.
அமலாக்கத் துறை சட்டவிதிகளின்படி தான் கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத் துறை காவல் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது. செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்தும் அவரைஅமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என கூறி ஆட்கொணர்வு மனுவை நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications