நாய் ஆடு ஆனது எப்படி.. ஏன் அவசரமாக புதைத்தீர்கள்.. நீதிபதிகள் சரமாரி கேள்வி
நாய்க்கறி புதைத்தது தொடர்பாக விளக்கம் தேவை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: "நாய் எப்படி ஆடு ஆனது? ஏன் அவசர அவசரமாக புதைக்கப்பட்டது" என்று நீதிபதிகள் மாநகராட்சிக்கு சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்க்கறி என்று கூறி 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு அதில் பெரும்பாலானவற்றை பினாயில் ஊற்றி அழித்துவிட்டனர். மீதி இறைச்சி ஆய்வுக்காக கொண்டு போகப்பட்டது.
ஆய்வு முடிவு வருவதற்குள்ளேயே சென்னை ஹோட்டல்களில் நாய்க்கறி என்ற விஷயம் பெரும் பரபரப்பாகி விட்டது. பிறகு 6 நாள் கழித்து வந்த ஆய்வு முடிவில், அது நாய்க்கறி இல்லை, ஆட்டுக்கறிதான் என்று தெரியவந்தது.

தனி ஆணையர்
இந்நிலையில், இதுகுறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "இறைச்சி குறித்த ஆய்வு அறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் இறைச்சியை ஆய்வு செய்ய தனி ஆணையரை நியமிக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாற்றம் எடுத்தது
இந்த மனுவினை ஐகோர்ட் நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பு வக்கீல் இது பற்றி சொல்லும்போது, "பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றாலும், அது சுகாதாரமற்ற முறையில் இருந்தது. அதிக நாற்றமெடுத்தது. அதனால்தான் அதை மாநகராட்சி அழித்துவிட்டது என்று கூறினார்.

ஏன் அவசரமாக புதைத்தீர்கள்?
இதைக் கேட்ட நீதிபதிகள், "முதலில் இதனை நாய்க்கறி என்று கூறிய அதிகாரிகள் பின்னர் எதற்காக அதனை ஆட்டுக்கறி என்று சொன்னார்கள்? அவசரம் அவசரமாக அந்த இறைச்சியை புதைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

விளக்கம் வேண்டும்
மேலும் இறைச்சி அழிக்கப்பட்டது சம்பந்தமாக வரும் 6-ந் தேதிக்குள் விளக்கமான அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications