ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு!
சென்னை: தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக கூறி ரூ.45 லட்சம் மோடி செய்தது தொடர்பாக சென்னை நீலாங்கரையை சேர்ந்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏப்ரல் 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் பீட்டர் அறிவரசன் (வயது 45). இவரது மனைவி பெயர் பினு கிறிஸ்டினா. இவர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர் அதேபோல் வங்கியில் நகைகளை ஏலம் எடுக்கும் முகவர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நீலாங்கரையை சேர்ந்த பல் மருத்துவர் சரவணன், பீட்டர் அறிவரசன் - பினு கிறிஸ்டினா தம்பதிக்கு எதிராக நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில், ''பீட்டர் அறிவரசன் குடும்ப நண்பர் போல் பழகி வந்தார். நெருக்கமாக பழகினார். இதனை பயன்படுத்தி என்னிடம் மோசடி செய்துவிட்டார். பழைய நகைகளை வாங்கி தருவதாக ரூ.45.60 லட்சத்தை பீட்டர் அறிவரசன் - பினு கிறிஸ்டினா தம்பதி வாங்கினார். ஆனால் நகை வாங்கி தரவில்லை. நீண்டகாலம் ஆனதால் பணத்தை திரும்ப கேட்டேன். அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் பழைய நகையை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த இவர்கள் மீது சட்டசப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரளித்தார். இதையடுத்து நீலாங்ரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான பீட்டர் அறிவரசன் மற்றும் பினு கிறிஸ்டினா தம்பதி மீது மோசடி உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை எதிர்த்து பினு கிறிஸ்டினா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போலீசுக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதி குமாரப்பன் விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர் அறிவரசன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தி நகரில் நகை கடை ஊழியர் ஒருவரின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக புகார் உள்ளது.












Click it and Unblock the Notifications