ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு!
சென்னை: தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக கூறி ரூ.45 லட்சம் மோடி செய்தது தொடர்பாக சென்னை நீலாங்கரையை சேர்ந்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏப்ரல் 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் பீட்டர் அறிவரசன் (வயது 45). இவரது மனைவி பெயர் பினு கிறிஸ்டினா. இவர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர் அதேபோல் வங்கியில் நகைகளை ஏலம் எடுக்கும் முகவர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நீலாங்கரையை சேர்ந்த பல் மருத்துவர் சரவணன், பீட்டர் அறிவரசன் - பினு கிறிஸ்டினா தம்பதிக்கு எதிராக நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில், ''பீட்டர் அறிவரசன் குடும்ப நண்பர் போல் பழகி வந்தார். நெருக்கமாக பழகினார். இதனை பயன்படுத்தி என்னிடம் மோசடி செய்துவிட்டார். பழைய நகைகளை வாங்கி தருவதாக ரூ.45.60 லட்சத்தை பீட்டர் அறிவரசன் - பினு கிறிஸ்டினா தம்பதி வாங்கினார். ஆனால் நகை வாங்கி தரவில்லை. நீண்டகாலம் ஆனதால் பணத்தை திரும்ப கேட்டேன். அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் பழைய நகையை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த இவர்கள் மீது சட்டசப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரளித்தார். இதையடுத்து நீலாங்ரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான பீட்டர் அறிவரசன் மற்றும் பினு கிறிஸ்டினா தம்பதி மீது மோசடி உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை எதிர்த்து பினு கிறிஸ்டினா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போலீசுக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதி குமாரப்பன் விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர் அறிவரசன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தி நகரில் நகை கடை ஊழியர் ஒருவரின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக புகார் உள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications