சென்னையில் பணம் இழந்து படுக்க இடமில்லாமல் தவிப்பு.. உதவியவருக்கு காலையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்
சென்னை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூரில் அமீன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி சென்னை வந்துள்ளார். இவர் சென்னையில் கே.கே.நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். அங்கு வந்த கர்நாடகா இளைஞர் ஒருவர் தனது உடைமைகள் தொலைந்ததாக கலங்கி உள்ளார். அவருக்கு பரிதாபப்பட்டு படுக்க இடம் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் செய்த செயல், அவரை மட்டுமல்ல, உதவி செய்வோரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு 'உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம்' தான் வரும் என்பதாக நிலைமை உள்ளது. யார் ஒருவர் உதவி செய்கிறார்களோ, அவர்களை பலிகடா ஆக்கி, முன்னேறும் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். மனித நேயத்துடன் உதவி செய்பவர்களிடம் திருடும் அளவிற்கு மனித நேயம் குறைந்து வருகிறது. மனசாட்சியே இல்லாமல் இன்றைக்கு விலங்குகளை போல் மனிதர்கள் பல பகுதிகளில் நடந்து கொள்கிறார்கள்.

சினிமாவை மிஞ்சும் சம்பவம்
நாய்கள், பூனைகள் உள்பட பல்வேறு விலங்குகள் தனக்கு உதவி செய்வர்களை மறப்பது இல்லை.. ஆனால் மனிதர்கள் உதவி செய்தால், அதனால் சிக்கலைத்தான் பல நேரங்களில் சந்திக்கிறார்கள். இரவில் பணம், உடமைகளை இழந்த ஒருவருக்கு உதவி செய்தவர், சினிமா படத்தில் வருவது போல் மொத்தமாக பறிகொடுத்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவாரூர் அமீன்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 39 வயதாகும் நூரில் அமீன் சவுதி அரேபியாவில் பணியாறி வருகிறார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி சென்னை வந்துள்ளார். சென்னையில் கே.கே.நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறார் நூரில் அமீன். இரவு உணவு சாப்பிட்டு விட்டு, தங்கும் விடுதிக்கு நடந்து சென்றுள்ளார்.
உதவி கேட்ட இளைஞர்
நூரில் அமீன் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத இளைஞர், நூரில் அமீனிடம் தன் பெயர் நஞ்சுண்ட கவுடா என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார். தனது உடைமைகள் அனைத்தும் தொலைந்து விட்டதாகவும், பணத்தை இழந்துவிட்டதாகவும், தங்குவதற்கு இடம் வேண்டும் எனவும் பரிதாபமாக உதவி கேட்டார். இதை கேட்டு இரக்கப்பட்ட நூரில் அமீன், நஞ்சுண்ட கவுடாவை, அவரது அறையில் தங்குவதற்கு அனுமதித்து இடம் கொடுத்தார்.
இதற்கிடையே நூரில் அமீன் அறையில் படுத்து தூங்கிவிட்டார். அவரோடு, நஞ்சுண்ட கவுடாவும் படுத்து தூங்கினார். நள்ளிரவில் கண் விழித்து எழுந்து பார்த்தபோது, நூரில் அமீன் அந்த அதிர்ச்சியை கண்டார். தன்னோடு நஞ்சுண்ட கவுடா என்ற பெயரில் தூங்கிய நபரை காணவில்லை. அந்த நபர், நூரில் அமீன் வைத்திருந்த ரூ.500 ரொக்க பணம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பிலான சவுதி அரேபிய ரியால் பணம், 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசில் புகார்
இரவில் பணம் இல்லாமல், உடமைகளை இழ்ந்து தவித்தவருக்கு உதவி செய்தவரிடமே பொருட்களை அந்த நபர் அபகரித்து சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த நூரில் அமீன், கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், தங்க இடம் கேட்டு, உதவி செய்தவரின் உடைமைகளை திருடி தப்பிய நபர் கர்நாடகா மாநிலம் தும்கர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதாகும் நஞ்சுண்ட கவுடா என்பது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். திருடிய பணத்தை அவர் செலவு செய்துவிட்டார். செல்போன்களையும் விற்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications