ஆசை ஆசையா பெண்ணுக்காக ரூம் போட்டு.. சென்னையில் போலீசில் ஏடாகூடமாக சிக்கி.. அந்த சார் யார்னு பாருங்க
சென்னை: பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. குழந்தையும் உள்ளது.. இந்நிலையில், இந்த பெண், கடந்த மாதம் ஆவடிக்கு பணி நிமித்தமாக டூவீலரில் வந்துள்ளார். ஆவடி செக்போஸ்ட் அருகே டூவீலரை அங்கேயே நிறுத்திவிட்டு, வேலை விஷயமாக சென்றுள்ளார்..
பிறகு வேலை முடிந்து வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த இடத்தில் டூவீலரை காணவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னுடைய டூவீலரை காணவில்லை என்று ஆவடி போலீசுக்கு சென்று புகார் அளித்தார்.

காணாமல் போன டூவீலர்
இந்த புகாரின்பேரில் போலீசாரும், வழக்குப்பதிவு செய்து டூவீலரையும், அதை திருடியவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்... இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, டூவீலர் கிடைத்துவிட்டதாக, ஆவடி போலீஸ்காரர் ஹரிதாஸ் என்பவர், அந்த பெண்ணுக்கு போன் செய்து சொல்லி உள்ளார்.. அத்துடன், ரூ.15,000 பணம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.
அதற்கு அந்த பெண், தன்னிடம் ரூ.5,000 மட்டுமே இருப்பதாக சொல்லவும், அதற்கு ஹரிதாஸ் சம்மதித்திருக்கிறார்.. எனவே, பணத்தை வாங்குவதற்காக அந்த பெண்ணை நேரில் வரவழைத்துள்ளார்.. அப்போது கூடுலாக ரூ.2,000 வாங்கி கொண்டாராம் ஹரிதாஸ்.. பிறகு, அந்த பெண்ணிடம், டூவீலரை மிகவும் கஷ்டப்பட்டு தேடி பிடித்தோம் என்று மெல்ல பேச்சை வளர்த்துள்ளார்..
தனிமையில் உல்லாசம்
பிறகு திடீரென, "உன் மீது எனக்கு ஆசையாக இருக்கு.. என்னுடன் தனிமையில் நீ உல்லாசமாக இருக்க வேண்டும். ஆவடியில் உள்ள நீச்சல் குளம், பார் வசதி உள்ள பிரபல லாட்ஜ்ஜில் உனக்காக ரூம் போட்டிருக்கிறேன்.. அங்கு வரவேண்டும்" என்று அழைத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே இதுகுறித்து தன்னுடைய அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்.. இதையடுத்து, போலீஸ்காரர் சொன்ன அந்த லாட்ஜூக்கு, அந்த பெண், தன்னுடைய அண்ணனை அழைத்து சென்றுள்ளார். அங்கு, போலீஸ்காரரிடம் இதுகுறித்து அண்ணனும், தங்கையும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனால் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
கலாட்டா - செல்போன் நம்பர்
இவர்கள் செய்த கலாட்டாவை பார்த்த லாட்ஜ் விடுதி நிர்வாகத்தினர், உடனே போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு வந்து, போலீஸ்காரரை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.. இதற்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய அண்ணனுடன் சென்று, ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் தந்தார்.
அந்த புகாரில், "என் கணவரின் இருசக்கர வாகனம், கடந்த 13ம் தேதி இரவு, ஆவடியில் மதுக்கூடம் அருகே திருடு போனது. இது குறித்து ஆவடி குற்றப்பிரிவில் நான் புகார் அளித்தேன். போலீசார், கணவரின் வாகனத்தை, பட்டாபிராம், காந்தி நகர் அருகே கண்டுபிடித்து, என்னிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் காவலர் ஹரிதாஸ் (30) என்பவர், என் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.
நீ அழகாக இருக்கிறாய்
அப்போது, 'நீ அழகாக இருக்கிறாய், ஆவடி செக்போஸ்ட் அருகே உள்ள விடுதிக்கு தனியாக வா' என அழைத்தார். என் அண்ணன் உதவியுடன், அங்கு சென்று காவலர் ஹரிதாசை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த புகாரின்பேரில், ஆவடி மகளிர் போலீசார் ஹரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. தொடர்ந்து விசாரணையையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். புகார் தர வந்த பெண்ணிடமே போலீஸ்காரர் அத்துமீறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை உண்டு பண்ணி வருகிறது. அத்துடன் போலீஸ்காரர் லாட்ஜில் வாக்குவாதம் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications