அதிகாரம் செலுத்தும் கவுன்சிலர் கணவர்கள்... சாட்டையை சுழற்றிய சென்னை மேயர் பிரியா - வெளியேற உத்தரவு
சென்னை: தண்டையார்பேட்டை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்களின் உறவினர்கள், நண்பர்கள் வெளியேறுமாறு சென்னை மேயர் பிரியா ஒலிபெருக்கியில் அறிவித்ததால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்.
Recommended Video
உள்ளாட்சித் தேர்தல் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை அடுத்து உள்ளாட்சி மன்றங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பலமும் உள்ளது. ஆனால், பெண்கள் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற்றவுடன் அவர்களின் கணவர்கள் அல்லது உறவினர்கள் அதிகாரம் செலுத்துவதாக புகார் எழுந்தது.

கிராமங்களில் மட்டுமின்றி சென்னை மாநகராட்சி மண்டல கூட்டங்களிலும் பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சென்னை மேயர் பிரியாவின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் 4 ல் அமைந்துள்ள காலரா மருத்துவமனையில் 34 முதல் 48 வரை உள்ள வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா இன்றைய கூட்டத்தில் பெண் மாமன்ற உறுப்பினர்களின் நண்பர்களோ உறவினர்களோ இருந்தால் அரங்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இது ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்திற்கு வந்த பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் உறவினர்கள் கட்சி பாகுபாடின்றி வெளியேறினர்.












Click it and Unblock the Notifications