அருமை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வடமாவட்டங்களில் இரண்டு நாள்கள் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய ,இயக்குனர் என்.புவியரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், "வளிமண்டலத்தின் மேலடுக்கில் காற்றின் பெருங்கூட்டம் ஏற்பட்டுள்ளது. இது தற்போது சென்னை நாகப்பட்டினத்துக்கு இடையே உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருவண்ணாமலை தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசனாது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை நிலவரப்படி 18 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை பொழிவாகும். சென்னையை பொறுத்தவரை 33 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் ஆகும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications