இன்றும் நாளையும் அதி கனமழை.. சென்னைக்கு ரெட் அலர்ட்.. அடுத்தடுத்த வானிலை மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் ,நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்குவங்கக் கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது.

இது அடுத்த வரும் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடதமிழக கடற்கரையையொட்டி நிலவக் கூடும். பின்னர் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் புதுவை கடற்கரை பகுதியில் காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே கடலூருக்கு அருகில் நாளை மாலை கரையை கடக்கும்.

புதுவை

புதுவை

இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரை காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் நாளை காலை முதல் வீசும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்று்ம புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. இதில் அதி கனமழை 5 இடங்களிலும் மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம், திருப்பூண்டி தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி

திருச்சி

இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கள்ளக்குறிச்சி,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும், கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் கநமழையும் பெய்யும்.

மிக பலத்த மழை

மிக பலத்த மழை

11 ஆம் தேதி அன்று திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, தருமபுரி, ஈரோடு , கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

Recommended Video

    நினைத்ததை விட வேகமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி
    மிக பலத்த மழை

    மிக பலத்த மழை

    சென்னைக்கு இன்றும் நாளையும் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும். அக்டோபர் முதல் தற்போது வரை தமிழகத்தில் 51 சதவீதம் மழை பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய 25 செமீட்டரை விட 51 சதவீதம் அதிகமாக 39 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அதி பலத்த மழையை தரும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    இதன்படி இந்த மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யும். கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும். இன்று பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும். நாளை (11-ந்தேதி) சில பகுதிகளில் அதி பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+