இனியும் தள்ளிப்போகாதே பருவமழையே... நவம்பர் 1ல் தொடங்கும் என வானிலை மையம் கணிப்பு!
சென்னை : நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்திலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது பருவமழை. இந்நிலையில் வானிலை முன் அறிவிப்பு குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருக்கிறது.
இந்த சுழற்சியால் வடமேற்கு வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்து மேற்கு திசை நோக்கி நகரும் போது வடகிழக்கு பருவக்காற்று வலுவடைந்து வடகிழக்கு பருவமழையாக வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம். தமிழகம், புதுவையை ஒட்டியுள்ள தெற்கு கடலோர பகுதிகள், தெற்கு உள்கர்நாடகாவை உள்ளடக்கிய பகுதிகள், ராயலசீமா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை துவங்க சாதகமான சூழல் உருவாகி வருகிறது. டிட்லி மற்றும் லூபான் புயல் காரணமாகவே பருவமழையானது தாமதமாகியுள்ளது.
[ஜாவா கடலில் இந்தோனேஷிய விமான பாகங்கள்.. எரிப்பொருளும் மிதக்கும் வீடியோ]
வருகிற 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த காலத்தில் 16 செ.மீ அளவிற்கு மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். சென்னையில் 12 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையிலும் சராசரியை விட 51 சதவீதம் குறைவான அளவே மழை பெய்தது என்றும் ஸ்டெல்லா கூறினார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications