தமிழகத்துக்கு நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்.. வங்கக் கடலில் புயல் சின்னம்
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் கியார் புயல் உருவானது. இதனால் தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் மழை பெய்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான மஹா புயல் குஜராத்தில் கரையை கடக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு நவ.6ல் முகூர்த்தக்கால் நடும் விழா
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதனிடையே அந்தமான் கடல் பகுதியில் நேற்றைய தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும்.
வலுப்பெறும்
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
லேசான மழை
இதனால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும். இந்த புயல் வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிஸா பகுதியை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் வான்ம மேகமூட்டத்துடன் காணப்படும்.
லேசான மழை
இதனால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும். இந்த புயல் வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிஸா பகுதியை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
எனவே 7-ஆம் தேதி வரை மத்திய தென் கிழக்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்று வரை அதிகமாகவே பெய்துள்ளது என்றார்.