28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க புதிய டெண்டர்! 2028 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கும்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையை அதிகப்படியானவர்களுக்கு வழங்கிடும் நோக்கி 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 6 பெட்டிகள் கொண்டவை ஆகும்.
இதுகுறித்து தமிழ் ரயில் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்கவும், சேவையை மேம்படுத்தவும் 28 புதிய மெட்ரோ ரயில்களை (6 பெட்டிகள் கொண்டவை) வாங்குவதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) கோரியுள்ளது.

திட்ட மதிப்பு: சுமார் ₹2,820.90 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய ரயில்கள் வாங்கப்பட உள்ளன.
கூடுதல் பெட்டிகள்: தற்போதுள்ள மெட்ரோ ரயில்களில் 4 பெட்டிகள் மட்டுமே உள்ளன. ஆனால், புதிதாக வாங்கப்படவுள்ள இந்த 28 ரயில்களும் 6 பெட்டிகளைக் (6-Coach Trains) கொண்டிருக்கும். இது அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்ல உதவும்.
முதற்கட்ட வழித்தடங்களில் (விமான நிலையம் - விம்கோ நகர் & சென்ட்ரல் - பரங்கிமலை) பீக் ஹவர்ஸில் (Peak Hours) ஏற்படும் கடுமையான நெரிசலைக் குறைப்பது.
தற்போதுள்ள 52 ரயில்களுடன் இந்த 28 புதிய ரயில்களும் சேரும்போது, மொத்த ரயில்களின் எண்ணிக்கை 80-ஆக உயரும்.
நிதியுதவி: இத்திட்டத்திற்குப் பன்னாட்டு வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறப்பட உள்ளது. இந்த ரயில்கள் 2028-ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மூலம், ரயில்களுக்கு இடையிலான கால இடைவெளி குறைக்கப்பட்டு, பயணிகள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications