சென்னையின் மிக முக்கிய ஸ்ட்ரெச்.. பல வருடத்திற்கு பின்.. மீண்டும் திரும்பும் வசந்தம்.. இதுதான் தேவை!
சென்னை: பல மாதங்களுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் இறுதியாக சோழிங்கநல்லூர் மற்றும் சிப்காட் இடையிலான பணியை மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்தப் பாதையில் பணியை மேற்கொள்வதற்காக புதிய துணை ஒப்பந்ததாரர் சார்பாக சில நாட்களுக்கு முன்புதான் இங்கே தொடக்க விழா நடத்தப்பட்டது. இங்கே முழு அளவிலான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று CMRL அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயிலின் OMR இன் ஒரு பகுதியின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகள் இறுதியாக மீண்டும் தொடங்கப்பட உள்ளன. ₹61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) ஆகிய மூன்று வழித்தடங்கள் தற்போது பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன.
காரிடார் 3 நகரின் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், OMR இன் கணிசமான பகுதி வழியாகவும், தரமணியிலிருந்து SIPCOT வரை செல்கிறது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் இடையே பணி சில காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் துணை ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ஒன்று நிறுத்தப்பட்டதால், பணியும் பின்னர் நிறுத்தப்பட்டது.
இந்தப் பாதையில் பணியை மேற்கொள்ளும் புதிய துணை ஒப்பந்ததாரர், சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறிய விழாவை நடத்தினார், மேலும் முழு அளவிலான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அடுத்த சில நாட்களில் பைலிங் ரிக் போன்ற கூடுதல் உபகரணங்கள் வரும் வேலை வேகம் பெற சிறிது நேரம் எடுக்கும், ஆனால் அது தொடங்கிவிட்டது, இனி இந்த பாதையில் சிக்கல்களை எதிர்பார்க்கவில்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓஎம்ஆர்: இது போக சென்னை ஓஎம்ஆரில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. 10 மெட்ரோ நிலையங்கள் இங்கே கட்டப்பட உள்ளன.
சென்னையின் ஐடி காரிடாரில் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தரமணி மற்றும் சோழிங்கநல்லூர் இடையே 10 கிமீ நீளத்திற்கு 2-ம் கட்டத்தின் கீழ் 10 உயர்நிலை ரயில் நிலையம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. CMRL இதுவரை மொத்தம் உள்ள 449 தூண்களில் 191 தூண்களை கட்டியுள்ளது மற்றும் 450 'U' கர்டர்களில் 65 ஐ நிறுவியுள்ளது, அதற்கு மேல் பாதைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன., மேலும் இந்த பாதை அடுத்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications