Chennai Update: பயணிகளின் கனிவான கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! பொங்கல் நேரத்தில் வெளியான அறிவிப்பு!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், அதிகம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்னைவாசிகள் 15ஆம் தேதிக்கு முன் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவர் என்பதால், 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
தற்போது சென்னை எழும்பூர் விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டியைகையொட்டி சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோ
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், அதிகம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். வழக்கமாக தீபாவளி, பொங்கல், போன்ற அரசு விடுமுறை தினங்களில் சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் , வழக்கம் போல் ஞாயிறு அட்டவணைப்படியே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 15, 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும். சென்னை மெட்ரோ தனது ரயில் சேவைகளை வழக்கமாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்குகிறது.
பொங்கல் விடுமுறை
காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
ஞாயிறு கால அட்டவணை
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications