சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் மனைவியுடன் நீ எப்படி பேசுவாய்.. கழுத்தை அறுத்து.. சென்னையில் நடந்த கொடூரம்.. சிசிடிவி காட்சி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புதுப்பேட்டை அருகே மது போதையில் இருந்த நண்பர்கள் சக நண்பனை என் மனைவியுடன் நீ எப்படி பேசலாம் என்று கூறியபடி கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    சென்னை: வாலிபர் கழுத்து அறுத்து கொடூர கொலை: பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

    சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். புதுப்பேட்டையில் மீன்பாடி வண்டி ஓட்டும் கூலி வேலை செய்து வந்தார்.

    சந்தோஷுக்கு மனைவி இறந்த நிலையில் ஒரு மகன் மட்டும் அவரது அத்தை வீட்டில் தங்கி வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு அங்குள்ள தனது மீன்பாடி வண்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கை நிறைய சம்பளத்தில் சூப்பர் பதவிக்கு வேலை காலி! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கை நிறைய சம்பளத்தில் சூப்பர் பதவிக்கு வேலை காலி!

    மது போதையில் தகராறு

    மது போதையில் தகராறு

    இந்த நிலையில் சந்தோஷின் நண்பர்களான இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் அங்கு வந்துள்ளார். அப்பொழுது மூன்று நபர்களும் மது போதையில் இருந்துள்ளனர். திடீரென அருண் மற்றும் இளவரசன் ஆகியோர் சந்தோஷ் குமாரை தனது மனைவியுடன் நீ எப்படி பேசுவாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பலத்த காயம்

    பலத்த காயம்

    ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அருண் குமார் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    பலத்த காயம்

    பலத்த காயம்

    ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அருண் குமார் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.

    போலீஸ் வருகை

    போலீஸ் வருகை

    இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் சந்தோஷ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமறைவு

    தலைமறைவு

    பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் சந்தோஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவியில் சந்தோஷ்குமாரின் கழுத்தை இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கத்தியால் அறுக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

    English summary
    Friends who were intoxicated near Pudhupettai in Chennai slit the throat of a fellow friend and fled. Police are searching for both.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X