சென்னையில் கேட்ட துப்பாக்கி சத்தம்..கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார் சுட்டுப் பிடிப்பு
சென்னை: சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 20 ஆம் தேதி மவுலி என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரவுடி விஜயகுமாரை பிடிக்க போலீஸார் முயற்சி செய்தனர். அப்போது, அவர் தப்ப முயன்றதால் ரவுடி விஜயகுமாரை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை, இந்திராணி நகர் ரயில் நிலையம் அருகே நவம்பர் 20 ஆம் தேதியன்று மவுலி என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கெளதம், நிரஞ்சன் ஆகிய இருவர் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரவுடி விஜயகுமாரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ரவுடி விஜயகுமார் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுமாரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, விஜயகுமார் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ரவுடி விஜயகுமாரின் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி விஜயகுமார் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications