கொரோனா கிடக்கட்டும்.. ஆயிரம் வாலா என்ன விலை கேளு.. தீவு திடலில் அலை மோதும் மக்கள்.. இதுதான் சென்னை!
சென்னை: சென்னையில் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி விட்டனர் என்பது தீவுத் திடலை பார்த்தால் தெரிகிறது.
Recommended Video
தீபாவளி பண்டிகைக்கு, புத்தாடை, பலகாரம் போலவே, பட்டாசு வெடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மக்கள் வாடிக்கை. சென்னையின் பட்டாசு விற்பனை கடல் என்று அழைக்கப்படுவது தீவுத்திடல் பகுதி. அங்கு மக்கள் கூட்டம் தற்போது அலைமோதி வருகிறது.

இன்று காலை முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். எனவே பட்டாசுகள் விற்பனையாகுமா என்று பயந்து போயிருந்த வியாபாரிகள் தற்போது நிம்மதி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
நேற்று மழை பெய்ததால், கூட்டம் குறைவாக இருந்ததால் வியாபாரிகளிடம் இயல்பாகவே பதட்டம் தொற்றிக்கொண்டது. ஆனால் நேற்றைக்கும் சேர்த்து வைத்து இன்றைக்கு பட்டாசு கடைகளில் கூட்டம் அலை மோதுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தீவுத்திடலில் கடந்த வருடம், 80 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக 40 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒவ்வொரு கடையிலும் இரண்டு வாளி தண்ணீர், மணல் மற்றும் தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. 4 தீயணைப்பு வாகனங்கள் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீவு திடல் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தீவுத் திடலில் விற்பனை செய்யப்படும், 90 சதவீதம் பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக உள்ளன. சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள்.
சில பட்டாசுகளுக்கு விலையேற்றம் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் மக்கள் ஆர்வத்தோடு பட்டாசுகளை வாங்கிச் செல்கிறார்கள். வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாட தயாராகி விட்டனர் என்பதை தீவுத்திடல் நமக்கு கண்முன் காட்டுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications