சென்னையில் அம்மா உணவகத்தை இடிக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி!
Recommended Video

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க முயன்றனர். இதை எதிர்த்து, அப்பகுதியினர் அம்மா உணவகம் முன்பு கையில் தட்டு ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள அம்மா உணவகம் உள்ளது. ஆனால் இது புரம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தை இடிப்பதற்காக சென்றனர். இன்று காலை நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தகவல் அறிந்த அப்பகுதியினர் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி இடித்தேயாக வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதை ஏற்காத அப்பகுதி மக்கள் அம்மா உணவகத்தின் முன்பு தர்ணா நடத்தினர். பெண்கள், ஆண்கள் என சுமார் 50 பேர் கையில் தட்டு வைத்தபடி கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அம்மா உணவகம் தற்பொழுது வரை இடிக்கபடாமல் உள்ளது. அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மா உணவகத்திற்கு ஆதரவாக மக்களே போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications