லிப்ட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. நீண்ட போராட்டத்துக்கு பிறகு எஸ்ஆர்எம் பல்கலை ஊழியர் கைது
Recommended Video

சென்னை: சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவர் விடுதி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் இருபாலருக்கும் தனித்தனி விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரி லிப்டில் வந்தார். அப்போது அவருடன் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் ஊழியர் அர்ஜுனும் (26) வந்தார்.

அருவருக்கத்தக்க..
லிப்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ஜுன் தனது ஆடையை களைந்து மாணவி முன்பு அருவருக்கத்தக்க செயலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டுள்ளார்.

தப்பியோட்டம்
இதனால் அச்சமடைந்த அர்ஜுன் லிப்ட்டை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கொடுத்தார். அதற்கு வார்டனோ ஒழுக்கமான உடைகளை அணியாததால்தான் அந்த ஊழியர் அப்படி நடந்து கொண்டதாக அதிர்ச்சி அளிக்கும் பதிலை தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டம்
அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் வடஇந்திய மாணவிகளுக்கு மட்டுமே நடக்கிறது என்றும் வார்டன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. தகவலறிந்த மாணவர்கள் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சக மாணவர்
அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மாணவி, அந்த ஊழியரை அடையாளம் காட்டினார். எனினும் இந்த விவகாரத்தில் மாணவியை அமைதி காக்குமாறு நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை
இதுகுறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தீப் சந்ஷேட்டி கூறுகையில் மாணவியின் புகார் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் கூறுவது தவறு என்று தெரிவித்தார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications