ஒரு குற்றம் கூட நடக்கவில்லை.. சென்னையில் உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு! பெருநகர காவல்துறை பெருமிதம்
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் 2026 புத்தாண்டு தினத்தை ஒட்டி தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளினால் உயிரிழப்பு மற்றும் குற்றங்கள் நடவாத புத்தாண்டு தினமாக அமைந்துள்ளது என சென்னை பெருநகர சென்னை காவல்துறை கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்," 2026ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலும், விபத்தில்லாமலும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டார்.

அதன் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு இடங்களில் வாகன தணிக்கைகள், போக்குவரத்து சீர் செய்தல், கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை அமைத்தும், விபத்தில்லாமல் கொண்டாடுவதற்காக மேம்பாலங்களில் இரவு நேரங்களில் மூடப்பட்டும், கடற்கரை பகுதிகளில் நீரில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைத்தும், காவல் உதவி மையங்கள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று (31.12.2025) சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2026-ம் புத்தாண்டு கொண்டாட்டம், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், உயிர் இழப்புகள் இல்லாமலும், விபத்துகள் தவிர்க்கப்பட்டும், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடவாமல் கொண்டாடப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நேற்று (31.12.2025) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்" என கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications