நான் போலீஸ்.. பணத்தை எடு.. ரூ.1.40 கோடியை வழிப்பறி செய்த பலே கொள்ளையன்..ரூ.70 லட்சத்தை மீட்ட போலீஸ்
சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் என கூறி ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையனிடம் இருந்து ரூ.70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை: போலீஸ் எனக்கூறி ஒன்றரை கோடி ரூபாய் வழிப்பறி செய்த கொள்ளையனை கைது செய்த போலீசார் 70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள் வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் வழக்கமாக ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி அண்மையில், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க சென்னை வந்துள்ளார் .
சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு சுப்பாராவ் மற்றும் ரகுமான் வந்துள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்த 1 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு தான் இது வழிப்பறி சம்பவம், காவலர்கள் என பொய் கூறி தங்களை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளனர் என்பது சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோருக்கு தெரிந்துள்ளது.

உடனடியாக, இருவரும் யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை வைத்து இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் பெயரில் யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து பணத்தை கொள்ளையடித்ததை இம்ரான் ஒப்புக்கொண்டான். கொள்ளையனிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்ரானுடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்த கொள்ளையன் குறித்தும் மீதி பணத்தை எங்கு பதுக்கி வைத்து உள்ளனர் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications