Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் போலீஸ்.. பணத்தை எடு.. ரூ.1.40 கோடியை வழிப்பறி செய்த பலே கொள்ளையன்..ரூ.70 லட்சத்தை மீட்ட போலீஸ்

சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் என கூறி ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையனிடம் இருந்து ரூ.70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீஸ் எனக்கூறி ஒன்றரை கோடி ரூபாய் வழிப்பறி செய்த கொள்ளையனை கைது செய்த போலீசார் 70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள் வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் வழக்கமாக ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி அண்மையில், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க சென்னை வந்துள்ளார் .

சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு சுப்பாராவ் மற்றும் ரகுமான் வந்துள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் இருந்த 1 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு தான் இது வழிப்பறி சம்பவம், காவலர்கள் என பொய் கூறி தங்களை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளனர் என்பது சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோருக்கு தெரிந்துள்ளது.

Chennai police have recovery 70 lakhs from the robber who stole Rs 1.40 crore at sowkarpettai

உடனடியாக, இருவரும் யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை வைத்து இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் பெயரில் யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

Chennai police have recovery 70 lakhs from the robber who stole Rs 1.40 crore at sowkarpettai

இந்தநிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து பணத்தை கொள்ளையடித்ததை இம்ரான் ஒப்புக்கொண்டான். கொள்ளையனிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்ரானுடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்த கொள்ளையன் குறித்தும் மீதி பணத்தை எங்கு பதுக்கி வைத்து உள்ளனர் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+