சென்னை கானாத்தூரில் தூக்கத்தை தொலைத்த மக்கள்! ஒரு மாதமாத 5 மணி நேர மின்வெட்டு! ஈசிஆரில் மறியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த கானாத்தூரில் நாகூர் மீரான் நகரில் தினந்தோறும் 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது: தினமும் எங்களுக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஒரு மாதமாக இந்த மின்வெட்டு பிரச்சனை இருக்கிறது.

power cut chennai

நாங்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த பதிலும் இல்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் 5 மணி நேரம் மின்வெட்டால் பள்ளி குழந்தைகளால் படிக்க முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. பெரியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் தூக்கமில்லாததால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அது போல் செம்பாக்கம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து தாம்பரம்- வேளச்சேரியில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சமாதானம் செய்து கலைந்து போக சொல்ல வந்த போலீஸாரிடம் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில், குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கோடைகால வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாகப் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத நள்ளிரவு மின்வெட்டு மற்றும் கடுமையான மின்னழுத்தக் குறைபாடு (Low Voltage) நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றித் தவித்து, ஆத்திரமடைந்து வீதிகளில் இறங்கிப் போராடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

power cut chennai

நள்ளிரவு மின்வெட்டு: பகல் நேரத்தில் நிலவும் உக்கிரமான வெயிலைத் தாங்கிப் பழகிய மக்களுக்கு, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை 2 முதல் 4 மணி நேரம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தடைபடும் போது மின்வாரிய அலுவலகங்களை (TNEB) மக்கள் தொடர்பு கொண்டால் முறையான பதில் கிடைப்பதில்லை என்றும், கட்டணமில்லா உதவி எண்கள் வேலை செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதி: புழுக்கம் தாங்காமல் கைக்குழந்தைகள் அழுவதும், முதியவர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுவதும் மக்களை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தங்களின் பொறுமையை இழந்து நள்ளிரவிலும், அதிகாலையிலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வியாசர்பாடி (சத்தியமூர்த்தி நகர்): இங்குள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் (TNUHB) தொடர் மின்வெட்டு மற்றும் மின்விசிறி கூட ஓடாத அளவிலான லோ-வோல்டேஜ் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

power cut chennai

முட்டுக்காடு: முட்டுக்காடு பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால், 200-க்கும் மேற்பட்ட ஆவேசமடைந்த குடியிருப்பாளர்கள் இ.சி.ஆர் (ECR) சாலையில் நள்ளிரவில் மறியல் செய்து போக்குவரத்தை முடக்கினர்.

இதர பகுதிகள்: புழல், கொளத்தூர், பெரம்பூர், ஆலப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த ஆரணி, பொன்னேரி போன்ற பல இடங்களிலும் பொதுமக்கள் "இதுக்கு மேல பொறுக்க முடியாது" என்ற கோஷங்களுடன் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலக முற்றுகைப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) உயர் அதிகாரிகள் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்:

தலைமை அதிகாரி விளக்கம்: "மாநிலத்தில் மின் உற்பத்திக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், கோடைகாலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரே நேரத்தில் அனைவரும் ஏசி (AC) பயன்படுத்துவதால், மின் தேவை உச்சத்தை (Peak Load) எட்டுகிறது. சென்னையின் மின்தேவை மட்டுமே கேரளா மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்தேவைக்கு இணையான 4,000 மெகாவாட்டைத் தொட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+