ஏரி போல் காட்சியளிக்கும் சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு .. வைரல் வீடியோ
சென்னை: சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பார்ப்பதற்கு ஏரி போல் காட்சியளிக்கிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அணைகள், ஏரிகள், குளம், குட்டை,ஆறுகள், கண்மாய்கள் என நிரம்பிவிட்டன.
#WATCH Chennai's popular Marina beach flooded due to heavy downpour as a result of cyclonic circulation in the Bay of Bengal#TamilNadu pic.twitter.com/L6N4iIhj1u
— ANI (@ANI) November 11, 2021
மேலும் தலைநகர் சென்னையே தண்ணீர் தேசமாக மாறியுள்ளது. மழை நீர் கால்வாய்களில் அடைப்பு, மெட்ரோ பணிகள் உள்ளிட்டவைகளால் தண்ணீர் போக வழியின்றி பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பரவாயில்லை
2015 ஆம் ஆண்டை காட்டிலும் இந்த நிலை பரவாயில்லை என்கிற போதிலும் மக்கள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

சிறு குழந்தைகள்
இதனால் பெரியவர்கள், சிறு குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு நடுத்தர வயதினர் மட்டும் அந்த வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பொருட்களை பாதுகாக்க தங்கியுள்ளார்கள். ஏற்கெனவே நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் தற்போது அவற்றை திறந்துவிட்டுள்ளனர்.
Recommended Video

மின்சாரம்
இதனால் எங்குத் திறந்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. மக்கள் வீட்டிலிருக்கும் தண்ணீரை வெளியேற்ற வெளியேற்ற மேலும் மேலும் கனமழையால் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் வெள்ளத்தில் அடித்துவருவதாக மக்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை வாங்கக் கூட இடுப்பளவு நீரில் நீந்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மெரினா
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மெரினா கடற்கரையிலும் வெள்ளம் சூழ்வது விட்டபாடில்லை. அத்தனை மணல் பரப்பிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மெரினாவின் மணற்பரப்பில் தேங்கியுள்ள தண்ணீரால் ஏரி போல் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் மாமல்லபுரம் கடற்கரை, மெரினா உள்ளிட்டவை சீற்றத்துடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications