மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்!
சென்னை: சென்னையில் இளம் தலைமுறையினர் நகரின் மைய பகுதியை விடுத்து, புறநகர் பகுதிகளில் வீடு வாங்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி டிராபிக் பிரச்சனை, பெரிய வீடுகளுக்கான தேவை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ள புறநகர் பகுதிகளில், ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய ஈர்ப்பின் மையமாக மாறியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், தெற்கு புறநகர் பகுதிகளை வேகமாக மாற்றி வருகிறது. ஜிஎஸ்டி சாலை மற்றும் ரேடியல் சாலை வழித்தடங்களில் உள்ள பகுதிகள், இப்போது வீடு வாங்க விரும்பும் இளைஞர்களின் முதல் தேர்வாக உருவெடுத்துள்ளன.
மெட்ரோ இணைப்பு வரும் பகுதிகளில் வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதால், இளம் தொழில் வல்லுநர்கள் இந்தப் பகுதிகளை விரும்புகின்றனர்.
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்
சென்னையின் வேகமாக வளரும் பகுதிகளில் ஒன்றாக மணப்பாக்கம் உருவெடுத்துள்ளது. முக்கிய ஐடி பார்க்கள் அருகில் இருப்பதால், இங்கு வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் அதிக அளவில் வீடு வாங்கும் பகுதியாக மணப்பாக்கம் மாறியுள்ளது. இங்கு ரியல் எஸ்டேட் சொத்துக்களின் விலைகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளன. வணிக ரியல் எஸ்டேட் வர்த்தகமும் அதிகரிப்பதால், வீட்டு சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது.
ரேடியல் சாலை - மலிவு விலை வீடுகளின் புதிய இடம்
பல்லாவரம் - தொரைப்பாக்கம் ரேடியல் சாலை வழித்தடம், பிரீமியம் பகுதிகளுக்கு அப்பால் வீடு வாங்க விரும்பும் மக்களின் விருப்ப இடமாக மாறியுள்ளது. இங்கு ஒப்பீட்டளவில் மலிவான விலையில் வீடுகள் கிடைப்பதுடன், முக்கிய வர்த்தக பகுதிகளுடன் நல்ல இணைப்பும் உள்ளது. மேலும் புதிதாக வரவிருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள், இந்தப் பகுதியின் தேவையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி ஊழியர்கள்
சென்னையின் ஐடி துறையில் பணியாற்றும் இளம் தொழில் வல்லுநர்கள், நீண்ட பயண நேரத்தைத் தவிர்க்க வேலை இடத்துக்கு அருகில் வீடு வாங்கும் போக்கை அதிகரித்துள்ளனர். 30 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த மாற்றத்துக்கு முன்னணியில் உள்ளனர். பெரிய வீடுகள், கேட்டட் கம்யூனிட்டிகள் மற்றும் நல்ல வாழ்க்கைத் தரம் ஆகியவை புறநகர் பகுதிகளின் ஈர்ப்பை அதிகரித்துள்ளன.
சென்னையின் ரியல் எஸ்டேட் வரைபடம் இப்போது மெதுவாக மாறி வருகிறது. இளம் தலைமுறையினரின் தேவைகளுக்கு ஏற்ப, புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவது, நகரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்ந்தால், சென்னை மெட்ரோபாலிட்டன் பகுதி இன்னும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications