அய்யோ குப்பையில வைரக்கம்மலை போட்டுட்டேனே.. பதறியபடி வந்த மூதாட்டி.. நெகிழ வைத்த தூய்மை பணியாளர்கள்!
குப்பையில் வீசப்பட்ட வைரக்கம்மலை,ஒரு மணி நேரம் போராடி குப்பையில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்துள்ளனர் தூய்மை பணியாளர்கள்
சென்னை: தாம்பரத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் வைர கம்மலை குப்பையுடன் சேர்த்து வீசிய நிலையில், சுமார் 1 மணி நேரம் போராடி தூய்மை பணியாளர்கள் குப்பையில் இருந்து வைரக் கம்மலை மீட்டுக் கொடுத்தனர். அவர்களை அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி ராஜகீழ்பாக்கம். இங்கு ராதே ஷியாம் அவென் யூ பகுதியில் 65 வயதாகும் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். ஜானகி அம்மா இவர் இன்று காலை தனது வீட்டை சுத்தப்படுத்தி விட்டு குப்பைகளை அள்ளி தனியாக வைத்திருக்கிறார் .

பின்னர் காலையில் தாம்பரம் மாநகராட்சி குப்பைகளை அள்ளும் வாகனம் தனது வீட்டின் அருகே வந்தவுடன் குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் போட்டிருக்கிறார். தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி கொண்டு சென்ற பின் தனது வீட்டிற்கு வந்த போது தனது காதில் மாட்டியிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பு உள்ள ஒரு வைர கம்மல் காணாமல் போனதை கண்டு மூதாட்டி ஜானகி அம்மாள் அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடி பார்த்திக்கிறார். ஆனால் வீட்டில் எங்குமே இல்லை,.
இதையடுத்து கீழே விழுந்த வைர கம்மலை குப்பைகளுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதியில் குப்பை அள்ளி சென்ற வாகனத்தை கண்டுபிடித்து அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனடியாக கார்மேகம் கம்மல் கிடைக்கிறதா என தூய்மை பணியாளர்களை வண்டியை நிறுத்தி தேட சொல்லி உள்ளார்.
ஒரு மணி நேரம் தேடலுக்கு பின்பு குப்பைகளின் மத்தியில் இருந்து தூய்மை பணியாளர்கள் வைர கம்மலை மீட்டனர். பின்பு சுகாதார ஆய்வாளர் சிவகுமார், மேலாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் இணைந்து அந்த வைர கம்மலை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்க்ள. குப்பையில் இருந்து தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மை பணியாளர்களை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுக்களும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications